Friday 19 September 2014

ஆன்மாவை அறிவதென்பது சாதாரணமானதல்ல.


யுகங்களை கடந்ததாக உள்ள ஆன்மாவை அறிதல் யாவராலும் சாத்தியமில்லை , அறிதலுக்குரிய அனுமதி பெற்ற ஜீவனே ஆன்மாவை அறிய முடியும். மேலும் எல்லோரும் அறிந்து ஆவது ஒன்றுமில்லை . உணர்ச்சி வசப்பட்டு ஒருநாள், ஒருமணி நேரம் பேசுவார்கள் நான் கண்டேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். அப்புறம் அவர்கள் வேலையில் மூழ்கிப்போவார்கள் . அதனால்தான் அது இரகசியமாக்கப்பட்டுள்ளது.
ஒரு நொடியும் விடாத , இடைவிடாத , இறைநினைவில் , இறை சிந்தனையில் , இறையுணர்வில் வாழ வேண்டும்.
தன்னை , தன்நினைவை மறந்து இறையுணர்வில் மூழ்கவேண்டும்.
இறை , மனித நிந்தனையற்ற , குற்றம் காணாத , மேல் கீழ் என பாகுபாடு பார்க்காத சர்வமும் சிவமே எனும் மெய்யுணர்வில் ஒன்றி தன்னை இயற்கையிடம் ஒப்புவிக்க வேண்டும்.
ஜபம் , தவம் , த்யானம் , யோகம் மூலம் தன்னை அறிதல் வேண்டும்.
தன்னை முழுக்க அறிந்தவர்கள் , ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள்,சித்தர்கள் ஆவார்கள். இதுவே பிறப்பெடுத்தவர்களுக்கு இறைவனால் (இயற்கையால்) தரப்படுகின்ற பேரருள் நிலை . (அதற்கு தான் இந்த போராட்டம் )
குறைவின்றி எப்பிறப்பும் இல்லை , ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோரும் குறைபாடுள்ளவர்களே , அவர்கள் தங்களின் குறைபாடுகளை கலைந்ததனால் உயர்ந்து அந்நிலையை அடைந்தார்கள் .
(அவர்கள் குறைபாடு என்பது மனிதர்களின் குறைபாடு போல அல்ல , குழப்பம் வேண்டாம்)
தன்னை கொஞ்சமும் குறைவின்றி முழுமையாக அறிந்தவன் – ஆன்மாவை அறியும் ஆற்றலை அடைகிறான்.
ஆன்மாவை அறிந்தவன் – அகிலம் முழுவதும் செயல்படும் செயலாற்றலை அறிந்தவனாகின்றான் .
ஆன்மாவை அறிந்தபின் அறிந்துகொள்ள வேறொன்றும் இல்லை.
அதுவே பிரபஞ்ச ரகசியம். அந்த இரகசியத்தை அறிந்தவன் எவனோ
அவனே யோகிகளின் தலைவன், அவனே ஞானிகளின் தலைவன், அவனே ரிஷிகளின் தலைவன் , அவனே சித்தர்களின் தலைவன் , அவனே இயற்கை, அவனே இறைவன்

சித்தர்கள்

உலகத்துல எல்லோருமே விரும்புறாங்க, தேடுறாங்க, முயற்சியும் செய்யுறாங்க, அற்புத சக்தியை பெறவேண்டும் என்று
அதை மையமாக கொண்டு எத்தனை படங்கள் வருகிறது. 
அண்டம் விட்டு அண்டம் பாய, உடலை ஒளியாக மாற்றிக்கொள்ள, கூடுவிட்டு கூடு பாய, மறைத்துக்கொள்ள, இன்னும் எத்தனையோ.
ஏழாம் அறிவு, Batman,Superman, Man of Steel, Hulk, Iron Man, Spider-Man, X-Men, Fantastic Four, Daredevil , 
Ghost Rider: Spirit of Vengeance, Darkman, Avatar, hollow man போன்ற படங்கள்
ஆனால் யாராலும் எவ்வளவு பணம் செலவு செய்தாலும், ஆராய்ச்சி செய்தாலும் அடைய முடியாத அஷ்டமா சித்து முதலான சர்வ வல்லமையை தமிழன் எப்படி நிரந்தரமாக பெற்றார்கள்.
நாம் அந்த வல்லமையை பெறவேண்டாமா, நம் குழந்தைகள் வெளி நாட்டுகாரர்களை பார்த்து தான் அழியும் ஆற்றலுக்கு ஆசை படவேண்டுமா.
நம் வீட்டு பிள்ளைகளுக்கு சொல்லிக்குடுப்போம்
சித்தர்கள் ஆற்றலை பற்றியும் அதை அடையும் முறை பற்றியும்.

Thursday 4 September 2014

மகா சிவராத்திரி

பிரம்மாவும் திருமாலும், சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.
திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மகா சிவராத்திரி நாளாகும்.

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்


1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.
3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.
4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.
5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.
6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.
8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
உண்மையை மற்றவருக்கும் பகிருங்கள்