Monday 30 March 2015

நம் முன்னோர் பெருமையை உலகறிய செய்வோம்..!

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.
எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது. இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!
வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!
நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..!
விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..!
நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..!

Friday 20 March 2015

அத்வைதம் துவைதம் II

மத்வாரின் துவைதம் ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு, இரண்டும் தனித்தனி என்பதாகும். நமக்கு முன்னும் நமக்குப் பின்னும் இறைவன் இருப்பதால் இறைவன் வேறு, நாம் வேறு, என எண்ணி இறைவனையும், நம்மையும் இரண்டாகப் பார்ப்பது துவைதம். 
இராமானுஜரின் விஷிஷ்டாத்வைதம் ஜீவாத்மா பரமாத்மாவின் ஒரு சிறிய பகுதி. அதாவது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒரே பொருளால் ஆனவைதான். ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்துதான் வெளிப்பட்டது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈசுவரன் என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை என்பது அவர் கருத்து. 
ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவம் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே இரண்டும் வேறல்ல என்பதாகும். இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பது அத்துவைதம்.(துவைதம் அற்ற நிலை, இரண்டற்ற ஒருமை நிலை.) 
அத்வைதம், துவைதம் இந்த இரண்டு கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்வது விசிஷ்டாத்வைதம்.(செவ்விருமை)


இது பற்றி  குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் பேசும் பொழுது அவர் சொன்ன விளக்கம் என்னவென்றால், 
நமக்கு முன் உணவு (துவைதம்)
வயிற்றுக்குள் உணவு (விசிட்டாத்துவைதம்)
உணவு நம் உடலில் சத்தாக மாறிய நிலை (அத்துவைதம்). 

சுவாமி விவேகானந்தர் இந்த மூன்றையும் இணைத்து அருமையான யோக விளக்கத்தை அருளினார்.
ஆன்மிகவாதியின் தொடக்க நிலை துவைதம். இடைப்பட்ட நிலை விசிஷ்டாத்வைதம். முடிந்த முழுமையான நிலை அத்வைதம் என்றார். 


அத்வைதம் துவைதம் I



ஒரு ரூமில் மரத்தால் செய்யப்பட்ட பொருள்கள் உள்ளன. எடுத்துக்கட்டாக நாற்காலிகள், மேஜை, கதவு, போன்ற பொருள்கள் அணைத்தும் மரத்தால் செய்யப்பட்ட பொருள் என்று சொன்னால் அது அத்வைதம்.  எல்லாம் ஒன்றுதான் என்று சொன்னால் அது அத்வைதம்


'நாற்காலி' வேறு கதவு வேறு என்று நாம் சொன்னால் அது துவைதம்.

தண்ணிர், பனிக்கட்டி இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான், அனால் தண்ணிரை குடிக்கமுடியும். பனிக்கட்டி?.  அனால் தண்ணிரை கடிக்க முடியாது. பனிக்கட்டி?.  இதுதான் துவைதம்.

எல்லாம் வேறு  என்று சொன்னால் அது துவைதம்.

Wednesday 18 March 2015

கிறிஸ்து பிறபதற்கு முன்பே ரோம் நாட்டில் வணங்க பட்ட வினாயகர் வழிபாடு



மிக அரிய படம்.கிறிஸ்து பிறபதற்கு முன்பே ரோம் நாட்டில் வணங்க பட்ட வினாயகர் வழிபாடு.
மிக பழமையான ரோம் வினாயகர்.

Tuesday 17 March 2015

பூர்வ ஜென்ம இரகசியம்


கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் !மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான். அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்!மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு? இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான். தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது. எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான். இதை யாரால் செய்து சாதிக்க முடியும்?எனவே, அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர். அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டினர். விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார். ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர். இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது. எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான். இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே! இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர். 12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே. கவசம் நீங்கியதால்தான் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது.நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாமல் திகைக்கிறோம். இவற்றுக்குக் காரணம் பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும். கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது.நன்றி 

Saturday 14 March 2015

மாவிலை தோரணம் கட்டுவது ஏன் ?

வீட்டு வாசல் தாண்டினாலே இரைச்சல், புழுதி, கிருமி தொற்று என, பலவகை பிரச்னைகள்.
வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் வரும்போது, நாம் மட்டும் வருவதில்லை;
சில, பல கிருமிகளும், நம்முடனேயே அழையா விருந்தாளிகளாய் உள்ளே வர வாய்ப்பு மிக மிக அதிகம்.



நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும், ஓர் எளிய வழி, வீட்டு வெளி வாசலில், அடிக்கடி மாவிலைத் தோரணம் கட்டுங்கள்; விசேஷங்களுக்கு மட்டும் தான் கட்டணும் என்றில்லாமல், மாவிலைகள் கிடைக்கும் போதெல்லாம் வாசல் நிலைப் படியில் கட்டிவிடுங்கள்.
'மாவிலை' கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும்.

Mango leaves cure for Diarrheoa - Food Habits and Nutrition Guide in Tamil
இவற்றில் மாவிலைகளுக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு என்கிறார்கள். அலங்காரத்துக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை.

இதை பிளாஸ்டிக் அலங்கார பொருளாக பயன்படுத்தாமல், உண்மையான இலைகளை பயன்படுத்துவதே நல்லது.

வீட்டு வாசலும், மங்களகரமாக இருக்கும்!

Friday 13 March 2015

படிகம்

இமயமலைச் சாரலில் உள்ள நேபாள நாட்டில் சில முக்கிய இடங்களில் உள்ள பாறைகளை உடைத்துத் தோண்டும் பொழுது அபூர்வமாகக் காணப்படுவதே க்ரிஸ்டல் (Crystal) வகை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும். இவை பல வண்ணங்களில் கிடைத்தாலும் பன்னீர் போன்ற தெளிவான நிறத்தால் உள்ள ஸ்படிகம் தான் பிற தாதுக்களால் கலவை பெறாத உண்மை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும். ஸ்வர்ண ஸ்படிகத்தின் அடர்த்தி எண் அதிகம். இதனால் இதன் திண்மையும் அதிகம். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் எடை அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட ஸ்படிக கற்களால் இணைக்கப்பட்ட ஸ்வர்ண ஸ்படிக மாலை உஷ்ணத்தையும், குளிர்ச்சியையும் வேகமாகக் கடத்தும் குணமுடையது.

இந்த இரத்தினம் வெள்ளை நிறத்துடன் கூடியது. இது 7 வண்ணங்களையும் வெளிவிடும் தன்மை கொண்டது. கிரிஸ்டல்கள் பூமிக்கடியில் பல இலட்சக்கணக்கான வருடங்களாகப் படிப்படியாக உருவாகின்றன. தண்ணீர் கெட்டித்தன்மையாக்கப்பட்டு அத்தோடு பூமிக்கடியில் உள்ள (Minerals) தாது உப்புக் களும் சேர்ந்து படிகமாக மாறுகிறது. இவைகளுக்கு (Heart Beat) உயிர்த் துடிப்பும் உண்டு, ஒரு நொடிக்கு 35658 அதிர்வுகளை உடையது. நாம் சொல்பவைகளை உள் வாங்கிக் கொள்ளும் தன்மையும் இவைகளில் காணப்படுகிறது(நல்ல, கெட்ட ). மேலும் இவை உள் வாங்கியவைகளை வெளிவிடும் தன்மையும் கொண்டதாக விளங்குகின்றது. இதை பல வடிவங்களில் அணியலாம். மாலை, தங்கக்காப்பு, மோதிரக்கல், பிரமிடு, பென்சில், படிகப்பந்து  இன்னும் பல வடிவங்களில் இந்த படிக இரத்தினம் உள்ளது.

சூட்டு உடம்பு உடையவர்கள் வெள்ளைப் படிகத்தை இரவு தண்ணீரில் போட்டு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர சூடு குறையும். உடம்பு வலிக்கு மேல் பூச்சாகவும் ஜபமாலையாகவும் இதைப் பயன்படுத்தலாம். வைரத்திற்குப் பதிலாகவும் இவற்றை உபயோகிக்கலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் போடலாம்.