Monday 30 June 2014

ஜீவ ஸமாதி



நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.
சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக விளக்கி அருளுவார்கள்.
உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்டநாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா ? என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார்.
ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர். திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு. அகத்தியர் ஒருவரல்ல பல பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் வாதிடுவோர் உண்டு.
ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று தோன்றுகிறது.
இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று. இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.
இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
இந்த தனஞ்செயன் என்கிற வாயுமட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ? அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடிஇருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால்தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால்தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.
சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும். மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக் கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார். வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார். யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள். அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.

Sunday 29 June 2014

கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பாகத்தை ஏமாற்றிய குசேலர்

கிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் குசேலர் என்கிற சுதாமாவும் ஒருவர். ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருபத்தினி, கிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார். அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் குருவோ, “குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது.” என்றார். “இதனால் குசேலா நீ வறுமையில் வாடுவாய்.” என்றார். சிறு வயதில் நடந்த இந்த சம்பவத்தை காலம், மறக்கச் செய்தது. குசேலருக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தனர். சந்தர்பத்திற்காக காத்திருந்த விதி, தன் வேலையை தொடங்கியது. குசேலன் வறுமையில் வாடினார். 

“எனக்கு இல்லையெனாலும் பராவாயில்லை, ஆனால் நம் குழந்தைகள் உடுக்க மாற்று ஆடை கூட இல்லாமல் இருக்கிறதே. உயிர் வாழ அடுத்த வேளை சாப்பாடும் இல்லையே.” என்று அழுதாள் குசேலனின் மனைவி சுசீலை. 

“எல்லாம் நம் விதி.” என்றார் குசேலர். 

“திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்களே. தெய்வம் போல இருக்கிறாரே உங்கள் நண்பர் கிருஷ்ணர். அவரை சந்தித்து வாருங்கள்.” என்றாள் சுசீலை. “கிருஷ்ணரிடம் உதவி கேளுங்கள்.” என்று சொன்னால், அது கணவரின் மனதை பாதிக்கும் சொல்லாகிவிடுமோ என்று அஞ்சிதான் சுசீலை, 

“கிருஷ்ணரை சந்தித்து வாருங்கள்.” என்றாள். மனைவியின் யோசனையை ஏற்று குசேலன், கிருஷணரை சந்திக்க புறப்பட்டார். அப்போது சுசீலை தன் கையில் சிறு மூட்டையுடன் வந்தாள். “பல வருடங்களுக்கு பிறகு உங்கள் நண்பரை சந்திக்க செல்கிறீர்கள். 

கிருஷ்ணருக்கு அவல் என்றால் மிக பிடிக்கும் என்பீர்களே. இதோ இதில் கொஞ்சம் அவல் இருக்கிறது. கொண்டு செல்லுங்கள்.”

 “சுசீலா.. இன்னும் நீ கிருஷ்ணரை சிறுவனாகவே நினைத்துவிட்டாய். இன்று அவன் இருக்கும் நிலையே வேறு. என்னை சந்தித்தாலே அது ஆச்சரியம். இந்த நிலையில் நான் தரும் அவலையா அவன் சாப்பிட போகிறான்.? சரி.கொடு.” என்று வாங்கி புறப்பட்டார். குசேலர் என்பவர் வந்திருப்பதாக கிருஷ்ணரிடம் பணியாளர்கள் சொன்ன உடன் வாசலுக்கு ஓடோடி வந்தார் கிருஷ்ணர். 

குசேலனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்றார். இந்த வரவேற்பை குசேலன் கனவிலும் நினைக்கவில்லை. மனைவி ருக்மணியிடம், “இவன் என் நண்பன் சுதாமா.” என்று குசேலரை அறிமுகப்படுத்தினார். குசேலரின் விழிகளில் கண்ணீர். வறுமையின் காரணமாக கந்தலான ஆடைகளையே அணிந்துக்கொண்டிருப்பதால் தன்னை எல்லோரும் குசேலன் என்று அழைக்க, தன் நண்பன் மட்டும் அதே பழைய பாசத்துடன் சுதாமா என்று அன்புடன் அழைக்கிறானே.” என்று கலங்கி போனார் குசேலன். 

ருக்மணி உள்ளே சென்று தன் கையில் பெரிய தங்க தட்டில் பழங்களை கொண்டு வந்தாள். “சாப்பிடு சுதாமா” என்றார் கிருஷ்ணர். தங்க தட்டில் பழங்களை எனக்கு தந்த கி்ருஷ்ணர் எங்கே?, அழுக்கு மூட்டையில் அவல் கொண்டு வந்த நான் எங்கே?” தன் மனைவி சுசீலையின் அறியாமையை கண்டு வேதனை அடைந்தார். எல்லாம் அறிந்த கிருஷ்ணருக்கு நண்பனின் மனநிலை தெரியாதா என்ன? “அண்ணி எப்படி இருக்கிறார்கள் சுதாமா.? எனக்கு என்ன தந்தனுப்பினார்கள்.? அது என்ன மூட்டை?.” என்றார் கிருஷ்ணர். குசேலன் மூட்டையை பிரித்து அவலை கையில் எடுத்தான். அதை ஆசையாக வாங்கி சாப்பிட்டார் கிருஷ்ணர். 


“அடேங்கப்பா, என் பங்கு அவல் கிடைக்க எத்தனை வருட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது பார்த்தாயா.” என்று சிரித்தார் கிருஷ்ணர். குசேலரும் சிரித்துவிட்டார். இவர்கள் என்ன பேசுகிறார்கள்? ஏன் சிரிக்கிறார்கள்? என்று புரியாமல் விழித்த ருக்மணி, நாமும் சிரித்து வைப்போம் என்று சிரித்தாள். எதுவும் புரியாமல், புரிந்தது போல சிரிக்கிறாளே என்று கிருஷ்ணர் மேலும் சிரித்தார். 

நண்பர் கிருஷ்ணரை சந்தித்த மனமகிழ்ச்சியுடன் விடைப்பெற்றார் குசேலர். கிருஷ்ணரிடம் உதவி கேட்காமல் திரும்புகிறோமே என்ற வருத்தம் குசேலனிடம் இல்லை. நண்பனின் அன்பே போதும் என்று வீடு திரும்பினார். அங்கே தன் இல்லம் பொன்மயமாக ஜொலிப்பதை கண்டு, எல்லாம் கிருஷ்ணரின் செயலே, என்று மகிழ்ந்து போனார்.


Sunday 22 June 2014

எனக்குப் பிடித்தவை...

திண்ணப்பன் என்னும் வேடன் கண்ணப்பன் ஆனதன் தத்துவம்
திண்ணன் என்ற வேடனின் எல்லையற்ற அன்புக்கு எளிவந்த பிரானாக ஆனவனல்லவா அவன். ஆனால் எல்லோரும் அவனுடைய செருப்புக் காலையும் எச்சில் நீரையும் பன்றிக் கறியையும் பேசுகிறார்கள். அவையல்ல முக்கியம். அவனுடைய பக்தியின் உயர்வுதான் முக்கியம்.
சிவலிங்கத்தின் கண்களிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்துத் தனது ஒரு கண்ணை அம்பால் பிடுங்கி அப்பினான். அந்தக் கண்ணில் ரத்தம் நின்றது. ஆனால் லிங்கத்தின் மறுகண்ணில் ரத்தம். உடனே தயங்காமல் தனது மற்றொரு கண்ணையும் பிடுங்கி அப்பினான். பிறகு கேவிக்கேவி அழுதானாம். தன் இரு கண்களும் போய்விட்டனவே என்றா? இல்லை, சிவனுக்கு மூன்று கண்களாயிற்றே. மூன்றாவது கண்ணில் ரத்தம் வழிந்தால் அப்புவதற்குத் தனக்கும் மூன்று கண்கள் இல்லையே என்று அழுதானாம்.
அவ்வாறு தனது உடலுக்கு ஏற்படும் ஊறையும் வலியையும் பொருட்படுத்தாமல் (தான் உடல் என்று கருதி அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிராமல், தேகான்ம பாவத்தை விடுத்து), புறக்கண்களைப் பொருட்படுத்தாமல் அகக்கண்ணால் நோக்கினால், சீவனுக்குச் சிவன் காண எளியவனாவான் என்பதே திண்ணப்பன் என்னும் வேடன் கண்ணப்பன் ஆனதன் தத்துவம்.
ஆன்மீக முயற்சிக்கு உறுதுணை என்ற அளவிலேதான் உடலைப் பேண வேண்டுமே அல்லாது, அதன் அழகும் சுகமும் வலிவும் வண்ணமும் லட்சியங்கள் அல்ல. இந்த ஒளி மனதில் உதயமானால் பிற உலகியல் எண்ணங்கள் என்னும் தாரகைகள் மனதில் ஒளியிழக்கும்

Thursday 19 June 2014

முதன்மைக்கடவுள் சிவனே!!!


இஸ்லாமியர்களின் முதன்மைக்கடவுள் சிவனே என்கிற அதிர்ச்சிசெய்தி!!!
மெக்காவில் உள்ள சிவலிங்கம் நவபாசானத்தால் ஆனது. பிரதிஷ்டை செய்தவர் போகர். கூடுவிட்டு கூடு பாய்ந்து செல்கையில் போகர் வைத்த சிலையது. அதற்க்கு முன் அந்த இடங்களில் பூனைக்கடவுள், நாய் கடவுள் மற்றும் பல சிலை வழிபாடு இருந்தது.
இதனால் பல இடங்களில் உங்கள் கடவுள் பெரியதா, என் கடவுள் பெரியாத என்ற சண்டை நடந்துகொண்டிருந்த்து. இதை கண்ட ஞானி (இஸ்லாமியர்கள் கருத்தின்படி) நபிகள் நாயகம் கடவுள் (உயிர்) ஒளியானவன் என்று சொல்லி அதுவரை இருந்த சிலைகளை எல்லாம் அழித்து விட்டார். ஏனெனில் ஆளாலுக்கு ஒரு கடவுளை தற்ப்போது இருக்கும் ஜாதிகட்சிமாதிரி ஆரம்பித்துவிட்டால் உலகின் முதன்மை கடவுளான சிவனின் கீழ் இவர்களை ஒன்றினைக்க முடியாது. அதனால்தான் இந்துக்களின் வழிப்பாட்டை அச்சு அசலாக கடைப்பிடிக்காமல் புது வித முறையை கையாண்டார் இந்த நபிகள் நாயகம் (ஸல்). ஆதனால் இந்த நவபாசான சிலையின் உண்மையை அவர் உணர்ந்ததால் அதைமட்டும் விட்டு வைத்து அதை சுற்றி அமர்து தியானம் செய்ய சொன்னார்.
காலப்போக்கில் பின் வந்த வம்சத்து மன்னர்கள் (அப்போதைய இஸ்லாம்), அதை ஒரு மதமாகவே மாற்றி விட்டனர். இந்த உண்மை அங்குள்ள பலருக்கு தெரியும். இந்த உண்மைகள் வெளிவந்தால் பல பிரச்சனைகள் உண்டாகுமென்று யாரும் உண்மையை கூறுவதில்லை.
ஒரு வேளை அப்படி கூறினால் நாம் தற்ப்போது விளையாடிக்கொண்டிருக்கும் காமவிளையாட்டுக்களுக்கு பலத்த அடி விழுந்துவிடும் என்று அஞ்சி இந்து மதத்தின் புது படைப்பாக இஸ்லாம் மத்த்தை தோற்றுவித்தார்கள்.
சில நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய குர்-ஆனை நீங்கள் எடுத்து படித்தால் பல உண்மைகள் விளங்கும் (ஏனென்றால் குர்-ஆன் என்ற புத்தகமே அப்போதுதான் முதன்முறையாக எழுத்தப்பட்டது). அதில் உள்ள விஷயங்கள் பல நம் தமிழ் நாட்டுடன் ஒத்து போகும்.
அவர்களின் ‘நமாஸ்’ என்கிற இறைவழிபடுதலை கவனித்து பார்த்தால் ஓம் என்பது வேறு வடிவத்தில் ஒலிக்கும். அவர்கள் காலை நாலு மணிக்கெல்லாம் தொழுகையை ஆரம்பித்து விடுவர். பிரம்மாமுகூர்தம் என்பது இரவும், பகலும் அற்ற வேளை. நாரயணன் வரும் வேளை. இந்துக்களின் கோட்பாடு. ஆன்ம வழிபாடு, ஆத்மா சுத்தி.
இது ஒரு தரப்பினர்:
இந்த படத்தில் நட்சத்திரக்குறியீடு ஆற்றலைக்குறிக்கும் குறியீடாக இருக்கிறது. ஆற்றல் (Energy) என்பதின் மறுமுனை சக்தி.
இன்னொரு தரப்பினர்:
நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைவதுப்போல் கங்கா தேவி ஈசனின் தலையில் மறைந்து செயல்படுவதை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது என்று.
அறைகுறையாக தெரிந்துகொண்டுள்ள இஸ்லாமியர்கள் என்கிற போர்வையில் இருக்கும் இந்துக்கள் என்றுதான் விழித்துக்கொள்ளப்போகிறார்களோ?

Monday 16 June 2014

கடவுளும் மனிதனும்!!!


ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.
கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."
ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
"மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள்........."
"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"
"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."
"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"
"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"
"என் உடல்?..........."
"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."
"என் ஆன்மா?"
"இல்லை........அது என்னுடையது.........."
மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........
கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"
-- ஒவ்வொரு நொடியும் வாழ்
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......அது மட்டுமே நிரந்தரம்.......
-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது.

Saturday 14 June 2014

நான் யார்?

நான் ஒரு தனி சிறப்பு மிக்க மனிதர் என்று நினைத்தல் நான் மிக சிறந்த மனிதனாக தான் இருப்பேன். அம்பானி ஆரம்பக்காலத்தில் இருந்தது தன்னை மிக சிறந்த தொழில் அதிபர் என்றும், தன்னை ஒரு வியாபாரம் காந்தம் என்றுதான் நினைத்தார் அதனால் தான் அவர் மிக சிறந்த ஒரு தொழில் அதிபர் ஆக முடிந்தது.


நம்மில் 97% மக்கள் நினைப்பது நமக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்றுதான் நினைக்கின்றோம்.

நம்மில் எத்தனை பேர் மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என்று நினைக்கின்றோம் மிகவும் குறைவு. நம்மில் 99.6% மக்கள் நினைப்பது யாராவது நமக்கு உதவ மாட்டர்களா.. என்றுதான் நினைக்கிறோம் நாம் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்று நினைப்பதில்லை.

நமது எண்ணம் கண்ணாடி போல தான் நீ சிரித்தால் அதுவும் சிரிக்கும். நீ அழுதல் அதுவும் அழும்.

உன் எண்ணத்தால் மட்டுமே நீ தனி சிறப்பு மிக்க மனிதனாக முடியும். நீ பணக்காரனாக நினைத்தல் நீ நிச்சயமாக பணக்காரனாக தான் வருவாய், நீ ஒன்றும் இல்லை என்று நினைத்தல் ஒன்றும் இல்லாமல் தான் போவாய்.

நீ நல்லவன் என்று நினைத்தல் அந்த எண்ணம் உன்னை தவறு செய்ய விடாது. நல்லதை நினைத்தல் நல்லதே நடக்கும். எண்ணத்தின் சக்தி மிகவும் உயர்ந்தது.

கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்

கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. இதைக் கண்ட கண்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்துதவுக, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின்பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன். இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான். இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.
அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா? சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான். வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால்தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன்.
மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம்.
போட்டியாகச் சுமக்கும்போது அது பொய்.
வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை.
நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம்.
யோசிக்காமல் கொடுப்பதே தானம்..!
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்

கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. இதைக் கண்ட கர்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்துதவுக, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன். இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான். இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.

அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா? சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான். வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால்தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன். 

மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். 
போட்டியாகச் சுமக்கும்போது அது பொய். 
வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. 
நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். 
யோசிக்காமல் கொடுப்பதே தானம்..!

#படித்தது..!

Wednesday 11 June 2014

ஏரிகளின் காவலன் பியூஷ் மனுஷ்...


பியூஷ் மனுஷ்
ராஜாஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்,ஆனால் தாத்தா காலத்திலேயே தமிழகத்தின் சேலம் நகருக்கு குடிபெயர்ந்த வியாபார குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர் பிறந்தது,வளர்ந்தது,படித்தது எல்லாமே சேலத்தில்தான்.
முற்போக்கு சிந்தனை கொண்ட இவர் கல்வி காசாக்கப்படுவதை கண்டித்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இவர் படித்த கல்லூரி நிர்வாகம் இவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டது.
அதன் பிறகு சேலம் மண்ணையும்,மக்களையும் பற்றி படிக்க ஆரம்பித்தார்.
குடிக்க தண்ணீர் இல்லை என்று புலம்பும் சேலம் மக்களின் கண்ணீருக்கு காரணம்தான் என்ன? என்பதை அறிய முற்பட்டார்.
அப்போதுதான் மழைக்காலத்தில் ஒன்று நிரம்பினால் இன்னொறுக்கு என்று சங்கிலித்தொடர் போல நீர் நிரம்பிகாணப்பட்டதும்,சேலத்தின் நீர்வளத்தை பாதுகாத்து வந்ததுமான முப்பதிற்கும் மேற்பட்ட ஏரிகள் தனியாரால் வாங்கப்பட்டும்,வளைக்கப்பட்டும் நாசமானது தெரியவந்தது.
இப்போது அந்த ஏரிகள் இருந்த இடமெல்லாம் தூர்ந்து போய் பாலைவனமாகி விட்டது. கிரானைட் மற்றும் பாக்சைட் நிறுவனங்களின் கழிவுகள் கொட்டிவைக்கப்படும் ரசாயன தொட்டியாகிவிட்டது.
10 ஆண்டு போராட்டம்:
இப்படி இழந்த குடிநீர் ஆதாரங்களை மீட்டெடுக்கவேண்டும் என்று முடிவுசெய்து சேலம் மக்கள் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி கடந்த பத்து வருடங்களாக போராடிவருகிறார்.மூங்கில் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்துவரும் இவர் இதற்காக செலவு செய்யும் நேரத்தை விட சேலம் மக்கள் குழுவிற்காக செலவிடும் நேரமே அதிகம்.
போராட்டம் மட்டுமே தீர்வாகாது ஒரு ஏரியின் அருமையை இந்த சேலத்தின் மக்களுக்கும், அதிகாரத்தில் இருப்பர்களுக்கும் உணர்த்தவேண்டும் என்று முடிவு செய்தார்.
அப்போதுதான் படு மோசமான நிலையில் இருந்த மூக்கனேரியை பாரமரிக்கும் பொறுப்பு இவருக்கு வந்தது.சேலம் மக்கள் குழுவின் சார்பாக நிதி திரட்டி இந்த ஏரியிலேயே இரவு பகலாக தனது நேரத்தை செலவழித்தார்.
முதலில் பள்ளி கல்லூரி மாணவர்களை அழைத்து ஏரியின் பெருமைகளை சொல்லி தூர் வார வைத்தார், ஏரிக்கு நடுவே 48 திட்டுக்களை ஏற்படுத்தி ஒவ்வொரு திட்டிலும் 300 மரங்களை நட்டார்.
பறவைகள் சரணாலயம்:
சில மாதங்கள் சென்ற பிறகு திட்டுக்களில் மரங்கள் வளர்ந்து பலன்கள் தந்தது,வளர்ந்த மரங்களுக்கு பறவைகள் வந்து தங்கியது, இப்போது மூக்கனேரி சோலைவனமாகவும், பறவைகள் சரணாலயமாகவும் மாறி நிற்கிறது.கரைகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளோடு சேலம் குடும்பத்தினர் வந்து மகிழ்ந்து செல்கின்றனர்.எல்லாவற்றுக்கும் மேலாக ஏரியில் தேக்கப்பட்ட நீரால் இந்த பகுதியின் நீர் மட்டம் உயர்ந்து இந்த பகுதியில் தண்ணீர் பிரச்னை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதன் பிறகுதான் ஏரியின் அருமையை அனைவருமே உணர ஆரம்பித்தனர்.
இப்போது இந்த பகுதி மக்கள் ஏரியில் யாரையும் குப்பை கொட்டவிடுவது இல்லை,பிளாஸ்டிக் ,பழைய துணிகள் போன்ற கழிவுகளை விட்டெறிவது இல்லை,ஏரியை புனிதமாக கருதி கரையோரங்களில் நான்தான் மாரி (தெய்வம்) என்னை மதியுங்கள், நான் உங்களை மதிப்பேன் என்று எழுதிவைத்து ஏரியை மாரியாக வழிபட்டு வருகின்றனர்.இன்னும் இரண்டு ஆண்டுகளில் மூக்கனேரி சேலத்தின் பெருமைமிக்க இடங்களில் ஒன்றாக திகழப்போவது உறுதி.
இதற்கு பிறகு மாவட்ட நிர்வாகமே சேலம் மக்கள் குழுவை அழைத்து சுகாதார சீர்கேட்டின் மொத்த உருவமாய் காணப்பட்ட அம்மாபேட்டை ஏரியையும்,இஸ்மாயில்கான் ஏரியையும் சுத்தம் செய்து மூக்கனேரி ஏரி போல மாற்றித்தர கேட்டுக்கொண்டுள்ளது.
நல்லது செய்ய முயன்றால்:
சமூகத்திற்கு நல்லது செய்யப்போனால் எத்தனை போட்டி பொறாமை எதிர்ப்புகள் வசவுகள் வரும் என்பதை ஒவ்வொரு நாளும் நான் உணர்கின்றேன், ஆனாலும் என்னையும், என் குடும்பத்தாரையும் வாழவைக்கும் சேலத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன்.
வெறுமனே சேட்டு வீட்டு பிள்ளையாக இருந்து வியாபாரத்தில் வரும் லாபம் நட்டத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பதில் எனக்கு மனமும் இல்லை விருப்பமும் இல்லை.
தண்ணீரை மையப்படுத்தி மூன்றாம் உலகப்போர் வருவதற்கு முன்பாக நம்நாட்டில் உள்நாட்டு போரே வந்துவிடும் அபாயம் உள்ளது,இதை உணர்ந்து நீர் நிலைகளை மதித்தால் நீர்நிலைகள் நம்மை மதிக்கும், அதற்கு உதாரணம்தான் மூக்கனேரி.
சேலம் மக்கள் குழுவில் நான் ஒரு சாதாரணமானவன்தான் ஏரியை சுத்தப்படுத்த முதலில் தரப்படும் பணம் என் பணம்தான், ஏரியை சுத்தப்படுத்த முதலில் சேறு வார இறங்கும் கால்கள் என்னுடைய கால்கள்தான், ஏரியை வலுப்படுத்த முதலில் கல் சுமப்பது என் கைகள்தான்.
மூக்கனேரி, அம்மாபேட்டை ஏரி, இஸ்மாயில்கான் ஏரி போல நம்நாட்டில் ஆயிரமாயிரம் ஏரிகள் இருக்கின்றன இந்த ஏரிகளை காப்பாற்றுவதுதான் நாம் நமது அடுத்த தலைமுறைக்கு தரும் நிஜமான செல்வம் நீர் நிலைகள்தான். ஆகவே கொஞ்சம் முயன்றால் என்னைவிட சிறப்பாக செயல்பட உங்களாலும் முடியும், உங்கள் ஊர் ஏரிகளை சிறப்பான நிலைக்கு கொண்டு வர முடியும்,தேவை எல்லாம் கொஞ்சம் முயற்சியே,உங்கள் முயற்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க எப்போதும் தயராக இருக்கிறேன் என்று சொல்லும் பியுஷ் மனுஷ்டன் தொடர்பு கொள்ள: 9443248582.

Tuesday 10 June 2014

தோஷம்

செவ்வாய் தோஷம் : செவ்வாய்க்கு அங்காரகன், குஜன் என்ற வேறு பெயர்களும் உண்டு. செவ்வாய் தோஷம் திருமணப் பொருத்தத்துடன், இதுவும் இருவருக்கும் சமமாக உள்ளதா என்று பார்க்கப்பட வேண்டும். செவ்வாய் ஜென்ம லக்னம், சந்திரன், சுக்கிரன் இம்மூன்றுக்கும் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும், ஜென்ம லக்னத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் உண்டு. மேற்கண்ட இடங்களில் செவ்வாய் இருந்து தோஷம் பெற்றிருந்தாலும், சூரியன், குரு, சனி, ராகு, கேது இவர்களுடன் சேர்ந்தோ அல்லது இவர்களால் பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோஷ பரிகாரம் உண்டு. அன்றியும் செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகரம், சிம்மம் ஆகிய ராசிகளில் இருந்தால் தோஷ பரிகாரம் உண்டு. திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் எப்படி பார்க்கப்பட வேண்டும் என அறியலாம்.

அ) ஆண், பெண் இருவருக்கும் தோஷம் பூரணமாக இருக்க வேண்டும்.
ஆ) ஆண், பெண் இருவருக்கும் தோஷம் பூரணமாக இருக்கக் கூடாது.
இ ) ஆண், பெண் இருவருக்கும் தோஷம் இருந்து பரிகாரம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்டபடி அமையாவிட்டால் பொருத்தம் இல்லை. அன்றியும் செவ்வாய் தசை இருவருக்கும் ஏற்கனவே முடிந்திருந்தாலோ அல்லது 60 வயதிற்கு மேல் வரவிருந்தாலோ தோஷம் இருவருக்கும் சமமாக அமையாவிட்டாலும் பொருத்தம் உண்டு.

2 ) புத்திர தோஷம் : புத்திரன் உள்ளதா இல்லையா என்று பார்க்கும் போது பொதுவாக ஆண் ஜாதகத்தை வைத்துதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஐந்தாமிடம் புத்திர ஸ்தானமாகும். குரு புத்திரகாரகன் ஆவார். குரு சுபஸ்தானத்தில் இருந்தாலும் 5 ஆம் இடத்தில் சுபர் இருந்தாலும் ஜாதகருக்கு புத்திரன், புத்திரி உண்டு. 5 ஆம் இடத்தில் ராகு இருந்தால் புத்திர தோஷம் உண்டு. இதற்கு நாக தோஷம் என்று பெயர். இவர்கள் நாக தோஷ பரிகாரம் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போது தான் தோஷம் நிவர்த்தி ஆகி புத்திர பாக்கியம் உண்டாகும்.
சில பரிகாரங்கள் :
அ) அரச மரம், வேப்ப மரம் இருக்குமிடத்தில் நாகப் பிரதிஷ்டை செய்து அர்ச்சனை அபிஷேகம் செய்ய வேண்டும். ஒரு மண்டலம் சுற்றி வர வேண்டும்.
ஆ) வெள்ளி நாகத்தை ஒரு மண்டலம் பூஜை செய்து சிவன் கோயிலில் செலுத்தி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இ) இராமேஸ்வரம், காளஹஸ்தி போன்ற புண்ணிய இடங்களுக்குச் சென்று நாகசக்தி செய்து சிவனை வழிபட வேண்டும்.

மூலம் நக்ஷத்தரத்தைப் பற்றி ஜோதிட சாஸ்த்திரத்தில் என்ன சொல்லப்ப்ட்டு இருக்கிறது என்று தெரிந்து கொள்வோமா ?

னி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம் என்பது காலப்போக்கில் ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்று மாறிவிட்டது.

ஆனி என்பது 'ஆண்'  என்றும், பின் என்பது 'பெண்' என்றும் தவறாக சொல்லப்படுகிறது.
 ”ஆனிமூலம் அரசாளும்”  என்றால் ஆனி மாதம் மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பௌர்ணமி யோகம் ஏற்படுகிறது. இது அவர்களுக்கு பல நன்மைகளையும், அரசாங்க சேவை செய்யும் வாய்ப்பையும் தரக்கூடியது. இவர்களின் வாழ்க்கை நன்றாக அமையும் வாய்ப்பு உள்ளது.

அடுத்து பின் மூலம் என்பது மூல நக்ஷத்திரத்தின் 4வது பாதத்தை குறிக்கும். இதில் பிறந்தவர்கள் தங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளையும், எதிரிகளையும் சமாளித்து வெற்றி அடையக்கூடியவர்கள். இப்படிப்பட்ட நல்ல பலனுள்ள மூல நக்ஷத்திரத்தின் சொல் ஆனி என்பது ஆண் என்றும் பின் என்பது பெண் என்றும் மாறியதன் உண்மை இப்போது உங்களுக்கு புரிந்திரூக்கும். எனினும் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணால் மாமனாருக்கு தோஷம் ஏற்படாமல் இருக்குமா என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும்.

இதைப்பற்றி தெரிந்து கொள்ள அந்த பெண்ணின் ஜாதகத்தை பார்க்க வேண்டும். லக்னத்திலிருந்து 3வது வீடு மாமனார் வீடு. இதில் கேது  இருந்தால் மாமனாருக்கு தோஷம் ஏற்படலாம். 4வது அல்லது 9 வது இடத்தில் கேது நின்றாலும் தோஷம் வரலாம். இப்படி இல்லாத பெண் ஜாதகத்தால் மாமனாருக்கு தோஷம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
தோஷம் என்று ஒன்று இருந்தால் பரிகாரம் இருக்கிறதா என்று தேடுவோம். மூலம் நக்ஷத்திரம் கேது பகவானின நக்ஷத்திரம். இந்த நக்ஷத்திரத்தில் பிறந்த கல்யாணமாகாதவர்கள், கீழ்கண்ட தலங்களில் ஏதாவது ஒன்றில் பரிகாரம் செய்யலாம்.

1. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவலஞ்சுழியில் இருக்கும் வெள்ளை விநாயகர் கோவிலில் பரிகாரம் செய்யலாம்.
2. திருப்பதிக்கு அருகே, காளஹஸ்தி கோவிலுள்ள பாதாள விநாயகரை வணங்கி பரிகாரம் செய்யலாம்.
3. மயிலாடுதறைக்கு அருகே உள்ள  கேதுவின் ஸ்தலமான கீழ்பெரும்பள்ளத்தில் உள்ள கோவிலிலும் பரிகாரம் செய்யலாம்.
மேற்கூறிய விவரங்களைப் படித்த பிறகு மூலம் நக்ஷத்திரத்தின் உண்மை உங்களுக்கு புரிந்து இருக்கும். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துச் சொல்லி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உங்களால் ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்க்கை அமைந்தால் கோடி புண்ணியம். அதை இழந்து விடாதீர்கள்.
இந்த கட்டுரை 'ஜாதக அலங்காரம' என்ற ஜோதிட நலில் கண்ட ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.
மூல ந
க்ஷத்திரத்தில் பிறந்த பெண் ஜாதகத்தை கீழே கொடுக்கப் பட்டுள்ள உதாரணங்களோடும், மேற்கண்ட விவரங்களடும் ஒப்பிட்டு பாருங்கள் அல்லது உங்கள் ஜோசியரை அணுகுங்கள். மூலம் நக்ஷத்திரம் வேண்டாம் என்று ஒதுக்காதீர்கள்.

உதாரணம் 1வி
வா


ங்


ம்
உதாரணம் 2
 புதன்9சூரியன்
 
சுக்ரன் 1லக்னம்
 
சூரியன்
செவ்வாய்
3கேது
 
குருராசி
மூலம் நக்ஷத்திரம்
3, 4, 9, ல் கேது இல்லை.
மாமனாரூக்கு தோஷம்
இல்லை.
 
ராகுகுருராசி
மூலம் நக்ஷத்திரம்
3ல் கேது.
மாமனாரூக்கு தோஷம்
ஏற்படலாம்.
4,9ல் கேது
 இருந்தாலும்
தோஷம் ஏற்படலாம்.

 

சுக்ரனி
 
கேது  

 
4சந்திரன்
 
3னி
 
செவ்வாய்1லக்னம்
 
சந்திரன்
ராகு
 ன்

 
இதை படித்த பிறகு மூல நக்ஷத்திரத்தினின்  பயம் உங்களைவிட்;டு போயிருக்கும். செவ்வாய் தோஷத்தை பார்ப்பது போல  மூல நக்ஷத்திரத்தில் பிறந்த பெண் ஜாதகத்தினால் மாமனாருக்கு தோஷம் ஏற்படுமா என்று பாருங்கள்.
அவசியமானால் தக்க பரிகாரம் செய்யுங்கள். எல்லா ஜாதகங்களையும் ஒதுக்காதீர்கள்.
இப்படிக்கு தங்கள அன்புள்ள புதுக்கோட்டை கல்யாணராமன்.

Monday 9 June 2014

பிரம்மஹத்தி தோஷம்

பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?

பிரம்மன் என்பவர் உயிரை படைப்பவர் ஆவார்.இந்த பூமியில் இருக்கும் ஒரு உயிரானது படைத்த கடவுளாலே எடுத்துகொள்ளவேண்டும்.அப்படியில்லாமல் ஒரு உயிருக்கு தீங்கு விளைவித்தாலோ,பாதிப்பை ஏற்படுத்தினாலோ,உயிரை எடுத்தாலோ உருவாகும் தோசமே பிரம்மஹத்தி தோசமாகும்.

ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால் , ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள்

1.
பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுப வித்து  , திருமணம் செய்யாமல் இருத்தல்

2.
பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது

3.
குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது

4.
குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது

5.
வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது

6 .
சென்ற பிறவிகளில் , ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல் 

7.
உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

1.
வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்

2.
தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்

3.
மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும்

4.
தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்

5.
திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது

6.
குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம் 
.

ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான், குருவுடன் இணைந்தாலோ , குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ , இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ, , சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம்.ஒருவரின் உயிரை எடுத்தால் மனம் என்ன பாடுபடுமோ அதேபோல் இந்த தோசம் இருப்பவர்களின் மனமும் இருக்கும்.

இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத் திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை , கல்வித் தடை , சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய சம்பளம் கிடைக்காத நிலை , கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும்.

பரிகாரம்;
-------------
ஸ்ரீராமபிரானுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.சிவ பக்தரான ராவணனை கொன்றதால் இந்த தோசம் ஏற்பட்டது.ராமர் வணங்கிய தேவிபட்டிணம் சென்றால் தோசம் விலகும்.ராமேஸ்வரம் சென்று வந்தாலும் தோசம் விலகும்.


இன்னொரு எளிமையான பரிகாரமும் செய்யலாம்.அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து வணங்கிவரவேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி,சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி,அர்ச்சனையும்,அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார்

    தமிழ்நாடு,கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர்  கோவிலுக்குச் சென்று , பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து , ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல்அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல்