Tuesday 10 June 2014

மூலம் நக்ஷத்தரத்தைப் பற்றி ஜோதிட சாஸ்த்திரத்தில் என்ன சொல்லப்ப்ட்டு இருக்கிறது என்று தெரிந்து கொள்வோமா ?

னி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம் என்பது காலப்போக்கில் ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்று மாறிவிட்டது.

ஆனி என்பது 'ஆண்'  என்றும், பின் என்பது 'பெண்' என்றும் தவறாக சொல்லப்படுகிறது.
 ”ஆனிமூலம் அரசாளும்”  என்றால் ஆனி மாதம் மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பௌர்ணமி யோகம் ஏற்படுகிறது. இது அவர்களுக்கு பல நன்மைகளையும், அரசாங்க சேவை செய்யும் வாய்ப்பையும் தரக்கூடியது. இவர்களின் வாழ்க்கை நன்றாக அமையும் வாய்ப்பு உள்ளது.

அடுத்து பின் மூலம் என்பது மூல நக்ஷத்திரத்தின் 4வது பாதத்தை குறிக்கும். இதில் பிறந்தவர்கள் தங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளையும், எதிரிகளையும் சமாளித்து வெற்றி அடையக்கூடியவர்கள். இப்படிப்பட்ட நல்ல பலனுள்ள மூல நக்ஷத்திரத்தின் சொல் ஆனி என்பது ஆண் என்றும் பின் என்பது பெண் என்றும் மாறியதன் உண்மை இப்போது உங்களுக்கு புரிந்திரூக்கும். எனினும் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணால் மாமனாருக்கு தோஷம் ஏற்படாமல் இருக்குமா என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும்.

இதைப்பற்றி தெரிந்து கொள்ள அந்த பெண்ணின் ஜாதகத்தை பார்க்க வேண்டும். லக்னத்திலிருந்து 3வது வீடு மாமனார் வீடு. இதில் கேது  இருந்தால் மாமனாருக்கு தோஷம் ஏற்படலாம். 4வது அல்லது 9 வது இடத்தில் கேது நின்றாலும் தோஷம் வரலாம். இப்படி இல்லாத பெண் ஜாதகத்தால் மாமனாருக்கு தோஷம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
தோஷம் என்று ஒன்று இருந்தால் பரிகாரம் இருக்கிறதா என்று தேடுவோம். மூலம் நக்ஷத்திரம் கேது பகவானின நக்ஷத்திரம். இந்த நக்ஷத்திரத்தில் பிறந்த கல்யாணமாகாதவர்கள், கீழ்கண்ட தலங்களில் ஏதாவது ஒன்றில் பரிகாரம் செய்யலாம்.

1. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவலஞ்சுழியில் இருக்கும் வெள்ளை விநாயகர் கோவிலில் பரிகாரம் செய்யலாம்.
2. திருப்பதிக்கு அருகே, காளஹஸ்தி கோவிலுள்ள பாதாள விநாயகரை வணங்கி பரிகாரம் செய்யலாம்.
3. மயிலாடுதறைக்கு அருகே உள்ள  கேதுவின் ஸ்தலமான கீழ்பெரும்பள்ளத்தில் உள்ள கோவிலிலும் பரிகாரம் செய்யலாம்.
மேற்கூறிய விவரங்களைப் படித்த பிறகு மூலம் நக்ஷத்திரத்தின் உண்மை உங்களுக்கு புரிந்து இருக்கும். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துச் சொல்லி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உங்களால் ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்க்கை அமைந்தால் கோடி புண்ணியம். அதை இழந்து விடாதீர்கள்.
இந்த கட்டுரை 'ஜாதக அலங்காரம' என்ற ஜோதிட நலில் கண்ட ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.
மூல ந
க்ஷத்திரத்தில் பிறந்த பெண் ஜாதகத்தை கீழே கொடுக்கப் பட்டுள்ள உதாரணங்களோடும், மேற்கண்ட விவரங்களடும் ஒப்பிட்டு பாருங்கள் அல்லது உங்கள் ஜோசியரை அணுகுங்கள். மூலம் நக்ஷத்திரம் வேண்டாம் என்று ஒதுக்காதீர்கள்.

உதாரணம் 1வி
வா


ங்


ம்
உதாரணம் 2
 புதன்9சூரியன்
 
சுக்ரன் 1லக்னம்
 
சூரியன்
செவ்வாய்
3கேது
 
குருராசி
மூலம் நக்ஷத்திரம்
3, 4, 9, ல் கேது இல்லை.
மாமனாரூக்கு தோஷம்
இல்லை.
 
ராகுகுருராசி
மூலம் நக்ஷத்திரம்
3ல் கேது.
மாமனாரூக்கு தோஷம்
ஏற்படலாம்.
4,9ல் கேது
 இருந்தாலும்
தோஷம் ஏற்படலாம்.

 

சுக்ரனி
 
கேது  

 
4சந்திரன்
 
3னி
 
செவ்வாய்1லக்னம்
 
சந்திரன்
ராகு
 ன்

 
இதை படித்த பிறகு மூல நக்ஷத்திரத்தினின்  பயம் உங்களைவிட்;டு போயிருக்கும். செவ்வாய் தோஷத்தை பார்ப்பது போல  மூல நக்ஷத்திரத்தில் பிறந்த பெண் ஜாதகத்தினால் மாமனாருக்கு தோஷம் ஏற்படுமா என்று பாருங்கள்.
அவசியமானால் தக்க பரிகாரம் செய்யுங்கள். எல்லா ஜாதகங்களையும் ஒதுக்காதீர்கள்.
இப்படிக்கு தங்கள அன்புள்ள புதுக்கோட்டை கல்யாணராமன்.

No comments:

Post a Comment