Friday 28 March 2014

படித்ததில் பிடித்தது - 2

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!!
மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான் .
...
உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது ,
என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினான் .
இராவணன் உபதேசித்தான் ........
1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர்.
2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே .
3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு .
4 .நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே .
5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.
6 . இறைவனை , விரும்பினாலும் மறுத்தாலும் ,முழுமையாகச் செய்..
நன்றி.

No comments:

Post a Comment