Friday 14 March 2014

காஸ்மிக் எனர்ஜி?

முதலில் நாம் செல்போன் சிக்னல் பற்றி பார்போம், அனைத்து இடங்களிலும் நமக்கு சிக்னல் கிடைக்கிறது. ஆனால் கைபேசி இன்றி இந்த சிக்னல் நமக்கு எந்த பயனும் கிடைக்காது. செல்போன் சிக்னல் வேண்டும் என்றால் நமக்கு மொபைல் போன் வேண்டும்.



அதுபோல் காஸ்மிக் எனர்ஜியும் அனைத்து இடங்களிலும் உள்ளது. முதலில்  நாம் இதை புரிந்துகொள்ள வேண்டும்.



செல்போன் சிக்னல் பெற நமக்கு மொபைல் போன் வேண்டும். இங்கு நமக்கு என்ன வேண்டும்?

இங்கு நாம் அழ்மனத்தை திறக்க வேண்டும். பிறகு நாம்மால் இந்த காஸ்மிக் எனர்ஜி இன் பலன்களை நாம்மல் அடையமுடியும்.

நம்முடைய சக்தியின் இருப்புக் குறைய குறையத்தான் நாம் ஆரோக்கியம் இழக்கின்றோம். காஸ்மிக் எனர்ஜி என்னும் இந்த கலையில் கை மற்றும் தலை வழியாக  அண்ட சராசரத்திலுள்ள சக்தியை கிரகித்து, உடம்பில் அனுப்பி தீய சக்திளை விரட்டி நல்ல சக்திகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஹீலிங், மனத்தை வைத்து குணப்படுத்தும் சிகிச்சை, காஸ்மிக் சக்தியை உபயோகப்படுத்தும் சிகிச்சை சிறிது காலமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் ஏழையோ, பணக்காரனோ, தெருவில்போகும் பிச்சைக்காரனோ அவர்களுக்குள்ளே ஒரு உலகமே அடங்கியுள்ளது. அவர்கள் உடம்பில் காஸ்மிக் சக்திதான் உள்ளது. நாம் எப்பொழுதும் நமக்குள் இருக்கும் இந்த சக்தியை புரிந்து கொள்கிறோமோ. அப்பொழுது நாம்மால் என்ன வேண்டுமோ அதை நிறைவேற்றி கொள்ள முடியும்.
பூமியில் உள்ள அண்ட சராசரத்தில் உள்ள சக்தியை கிரகித்து நம்மையும் குணப்படுத்தி, மற்றவர்களையும் குணப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் இந்த மாபெரும் சக்தியை கொடுத்திருக்கிறார். 

உங்கள் கருத்துக்களை தெருவிக்கும், If i did mistake please comment 

No comments:

Post a Comment